Kogilavani / 2012 மார்ச் 05 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் இளைஞரொருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளதாக கரடியானாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயச்சந்திரன் (வயது 27) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கடந்த 4 நாட்களுக்கு முன்னார் காணமல் போனமை தொடர்பில் உறவினர்கள் பொலிஸில் முறையிட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.சியாம் மரண விசாரணை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிவட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .