2026 மே 02, சனிக்கிழமை

பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான கடைத்தொகுதி வாகரையில் திறப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில், மகளிர் பொருளாதார சமூக அபிவிருத்தி நிறுவனத்தின், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் சந்தைக் கடைத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மிக்கெலே செசெரே, எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரிதியோன், பிரதிப் பணிப்பாளர், விவசாய உத்தியோகத்தர், கால்நடை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

லுதரன் உலக நிவாரண நிறுவனத்தின் நிதி அனுசரணையில், எஸ்கோ நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் இச் சந்தைக் கடைத் தொகுதி அமைக்கப்பட்டள்ளது.

இச்சந்தைக் கடைத் தொகுதியில், தையல் வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றும் பல தேவைக்கடையொன்றும் அமைந்துள்ளது.

இக்கடைத் தொகுதியானது மாவடியோடை, வாகரை, உள்ளிட்ட பல பிரதேசங்களையும் சேர்ந்த பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்டகள் பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .