2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சுயாதீன ஊடகவியலாளர் சக்திவேலுக்கு கொலை மிரட்டல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் வ.சக்திவேலின் வீட்டுக்குச் சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளனர் என்று வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு வெல்லாவெளி பொலிஸாரக்கு களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை குறித்த ஊடகவியலாளரின் தாயார் வசிக்கும் இளைஞர் விவசாயத்திட்டம் தும்பங்கேணி எனும் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளிலும் மச்சக்கரவண்டியிலும் சென்றுள்ள நான்கு பேர், உங்களது மகன் ஓர் ஊடகவியலாளர்தானே அவரை நாம் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் கடத்துவோம் அல்லது அவரை கொலைசெய்வோம் என அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர் என சக்திவேலின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டுக்கு வந்தவர்களில் இருவர் கோவில்போரதீவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் யார் என்று தெரியாது எனவும் தாயார் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கிணங்க வெல்லாவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .