2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஐதுசன்)


விவசாயம், நாட்டுக்கூத்துக்கலை ஆகியவற்றுக்கு பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு கிராமத்தில் கலப்பு உலோகப் பொருள் உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்தியாவின் பரம்பரையிலிருந்து வந்த கிறிஸ்தோம்பு வேலாயுதம் சாந்த பத்மலால் இக்கிராமத்துக்கு வந்து உலோக உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்கின்றார்.

தேற்றாத்தீவு பிரதான வீதியில் இவரது வேலைத்தளம் அமைந்துள்ளது. வளப்பற்றாக்குறை நிலவினாலும் கிடைத்த  வளங்களைக் கொண்டு உலோகப் பொருள் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றார்.

உலோகப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் கிறிஸ்தோம்பு வேலாயுதம் சாந்த பத்;மலால் தெரிவிக்கையில்,

'பித்தளை, செம்பு, ஈயம், வெண்கலம், அலுமினியம், வெள்ளீயம், தங்கம், இரும்பு, செம்பு  உள்ளிட்ட பல உலோகங்களைக் கொண்டு உலோகப் பொருள் உற்பத்தியை மேற்கொள்கின்றேன்.

கோவில் மணி, கொடித்தம்பம், கலசம், உருவம், திருவாத்தி, வேல், திரிசூலம், பஞ்சமணி, பூசைமணி, நாகதீபம், கற்பூரத்தட்டு, திருவாச்சி உள்ளிட்ட பல உற்பத்திகளை செய்கின்றேன்' எனக் கூறினார். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X