2026 மே 07, வியாழக்கிழமை

சமூக ஊடகங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

Super User   / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடகங்களில் ஒழுக்கக் கோவையின் முக்கியத்தும் எனும் தலைப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வு எதிர்வரும் மே மாத இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வில் திருகோணமலை, மட்டக்கப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சமூக ஊடகங்களில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம் ஊடவியலாளர்கள் கலந்துகொள்ள முடியும்.

இதன்போது தலைசிறந்த விரிவுரையாளர்களினால் விரிவுரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில்; கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களின் சுய விபரக்கோவையினை எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும்

பயிற்சி இணைப்பாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், A-3 - 1/1, மெனிங் டவுன், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 8 (Programme Coordinator, Sri Lanka Muslim Media Forum, A3-1/1, Manning Town Flats, Elvitigala Mawatha, Colombo 8) என்ற முகவரிக்கோ அல்லது muslimmediaforum@gmail.com, rifthy.ali@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ சுய விபரக்கோவையினை அனுப்ப முடியும்.

இது போன்ற வதிவிட செயலமர்வொன்று புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சிலாபம் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • rasmin Thursday, 18 April 2013 06:03 AM

    புத்தளத்தில் நடைப்பெற்ற அநீதி மட்டக்களப்பில் நடைபெறாமல் இருக்க வேண்டும்.

    புத்தளத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரை பதில் வழங்காமல் முஸ்லிம் மீடியா போரம் மௌனம் காப்பது தொடர்ந்து தவறுகள் நடப்பதினை ஊக்குவிக்கும்.

    Reply : 0       0

    jawahira Thursday, 18 April 2013 02:18 PM

    பாதிக்கப்பட்ட புத்தளம் ஊடகவியலாளர்களுக்கு தீர்வினை கண்டு விட்டு மட்டுவுக்கு வாங்க சேர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .