2026 மே 06, புதன்கிழமை

வணிகக்கல்வி ஆசிரியரின் வீட்டில் கொள்ளை

A.P.Mathan   / 2013 மே 11 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
மட்டக்களப்பின் பிரபல வணிகக்கல்வி ஆசிரியரின் வீட்டில் நேற்று முன்தினம் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது.
 
இக் கொள்ளை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் - ஆசிரியரின் வீட்டில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கல்லடியிலுள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாதவேளை மேல்மாடியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுமாரிகளை உடைத்து அவற்றினுள் இருந்த 4-5 பவுண் வரையான நடைகளையும், 45 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மாலை வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் பொருள்கள் வீசப்பட்ட நிலையில் இருப்பதனைக்கண்டு திருடர்கள் நுழைந்ததனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கே வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .