2026 மே 07, வியாழக்கிழமை

பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

110 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கட்ட வீதிகள் மற்றும் வடிகான்கள் என்பன இதன்போது திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.

காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் சவூதி அரேபிய நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அபூஸாலிஹ், ஹாலித் தாவூத், சவூதி அரேபியா ரியாத் ஜாமியத்துல் இமாம் ஸுஊத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உமர் இப்னு ஸுஊத் அல் ஈத், சவூதி அரேபியாவின் அல்கஸீம் பலக்லைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அபூ சுலைமான் அப்துல்லா சாலிஹ் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் நிதியொதுக்கீட்டில் புறநெகும மற்றும் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் சின்னத்தோன வீதி, வடிகானுடன் 90 இலட்சம் ரூபா செலவிலும் மற்றும் பரீட் நகர் வீதி 20 இலட்சம் ரூபா செலவிலும் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளன.



  Comments - 0

  • vallarasu Wednesday, 15 May 2013 08:24 AM

    நினைவு இருக்கிறதா? கல்லடிப்பாலம் திறப்பு விழவின் போது இவர் பௌத்தர்களின் தேசிய ஆடை அணிந்து இருந்தார். இன்று எமது முஸ்லிம் பெரியார்களுடன்...?! ஏன் இவருக்கு ஒரு தொப்பி போட வெட்கமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .