2026 மே 07, வியாழக்கிழமை

விவசாயிகளிடமிருந்து நியாய விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 மே 17 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சசிகுமார், எம்.எஸ். நூர்தீன்

'குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து வரும் விவசாயிகள் எதிர்காலத்தில் நியாய விலையில் நெல்லை விற்பனை செய்து கூடிய இலாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 120 மில்லியன் செலவில் 6 நெற்களஞ்சியங்கள் அமைக்க தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது' என பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

வவுணதீவு, அரசடிச்சேனையில் 19 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நெற்களஞ்சியத்துக்கு அடிக்கல் நட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்வினை நட்டிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 'நெல்லைச் சேமிக்க போதிய களஞ்சிய வசதி இல்லாமையினால் நெல் சந்தைப்படுத்தும் சபையினால் நெல்லை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல் இருந்து வருகின்றது.

இதனால் விவசாயிகளிடமிருந்து உரிய காலத்தில் நெல்லை நியாய விலைக்கு கொள்வனவு செய்ய முடிவதில்லை. இதனால் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதனால் பாரிய நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் ஊனூடாக நெல் களஞ்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் திக்கோடை, கரடியனாறு, வாகரை, கிரான், வவுணதீவு, பட்டிப்பளை ஆகிய இடங்களில் ஆறு நெற்களஞ்சியங்கள் சுமார் 120 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுகின்றன' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் மற்றும் ஈச்சந்தீவு கன்னன்குடா ப.நோ.கூ.சங்க அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0

  • vallarasu Friday, 17 May 2013 11:35 AM

    ஐய்யா... இப்படி எமது பகுதியிலும் இருக்கிறது. இவர்கள் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து 3 மாதத்திற்கு பின்தான் நெல் வாங்க வருவார்கள்..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .