2026 மே 06, புதன்கிழமை

கடலில் குதித்த பெண் உயிருடன் மீட்பு

Kogilavani   / 2013 மே 28 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கடலில் குதித்த பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு கடலில் குதித்துள்ளார்.

இவர் கடலில் குதிப்பதை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவரை உயிருடன் மீட்டு காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இப்பெண், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .