2026 மே 07, வியாழக்கிழமை

சிறுமி வல்லுறவு; சித்தப்பா கைது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 11 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் 12 வயதுச் சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுமியினுடைய தாயின் இரண்டாம் தாரமான சிறிய தந்தை  முறையானவரே நேற்று திங்கட்கிழமை இரவு  இச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 30  வயது மதிக்கத்தக்க இந்த சந்தேக நபரை  நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0

  • vallarasu Tuesday, 11 June 2013 07:14 AM

    இவங்கள அசிட் கொன்சம் ஊற்றி.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .