2026 மே 09, சனிக்கிழமை

dd

நாவலடியில் பள்ளிவாசல் உடைப்பு

Super User   / 2013 ஜூலை 01 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசல் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிவாசலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் கருத்துத் தெரிவிக்கையில்,

"நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இஷா நேரத் தொழுகை முடிந்தவுடன் இரவு 9 மணியளவில் பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது.
பள்ளிவாயலில் கடமை செய்பவர் இன்று அதிகாலை தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்தபோது பள்ளிவாயல் உடைந்து காணப்பட்டுள்ளது.

பள்ளிவாயலில் உள்ள இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அலுமாரி உடைக்கப்பட்டு அதனுல் இருந்த பொருட்களை வெளியே எரிந்துள்ளன" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0

  • nanban Monday, 01 July 2013 09:47 AM

    யா அல்லாஹ், இதை மேற்கொண்டவர்களுக்கு உன்னுடைய தண்டனைகளில் எது மிகப் பெரிய தண்டனையோ அதை வழங்குவாயாக...

    Reply : 0       0

    vasahan Tuesday, 02 July 2013 04:01 AM

    இந்த பள்ளிவாயல் பாதுகாப்பு படையினரின் முகாமுக்கு முன்னால் அமைந்துள்ளது..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .