2026 மே 09, சனிக்கிழமை

விவசாயிகள் மீது தாக்குதல்; கண்டித்து ஆர்ப்பட்டம்

Super User   / 2013 ஜூலை 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித், க.ருத்தரன்


தமிழ் விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பட்டமொன்று இடம்பெற்றது.

கிரான் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணியின்போது சட்டவிரோத விவசாயச் செய்கையை தடைசெய்யவும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் விவசாயிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கி.துரைராஜசிங்கம், மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் விவசாயிகளினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் விவசாய அமைப்பு  ஆகியவற்றின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளா, மாவட்ட நீர்ப்பாசன  திணைக்கள பணிப்பாளர் மற்றும் கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு குறித்த மகஜரை சமர்பித்தனர்.




  Comments - 0

  • mattakkalappaan Tuesday, 02 July 2013 10:21 AM

    ஆடு கொழுத்தா இடையனுக்கு வாசி என்பதுபோல் வயதானவரின் கட்சிக்காரர்கள் சந்தர்ப்பம் பார்த்து அலைகின்றனர். ஏனைய சில கட்சிகளும் கூட இதற்கு விதி விலக்கல்ல. எது எப்படியோ குழு மோதல்கள் சமூக, மத மோதல்களாக காட்டுப்படாத வரைக்கும் நன்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .