2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நிலக்கடலை அமோக விளைச்சல்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலைச் செய்கையாளர்களுக்கு இம்முறை அமோக விளைச்சல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சவுக்கடி கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பிடுங்கப்பட்டன.

விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் இங்கு மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலைகளை பிடுங்கும் நிகழ்வை  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,  மட்;டக்களப்பு மாவட்ட விவாசய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் இரா.கரிஹரன், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .