2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில்  அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வு புதிய காத்தான்குடி பல்நோக்கு மண்டபத்தில்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வுகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை நடத்தி வருகின்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் ரி.வசந்தராசா  தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் உபதலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வு 5 தினங்களுக்கு  நடைபெறவுள்ளன. இந்த  மாதத்தில் 2 தினங்களிலும் அடுத்த மாதம் 3  தினங்களிலும் இந்தச் செயலமர்வு நடைபெறும் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X