2025 மே 03, சனிக்கிழமை

எருமை மாட்டுடன் மோதுண்ட ஆசிரியர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது வீதிக்கு குறுக்காகப் பாய்ந்த எருமை மாட்டுடன் மோதுண்டு ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.  

மண்டூர், தம்பலவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியரான வேலாயுதம் அமிர்தமோனன் (வயது 22)  என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், உடனடியாக களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இங்கு சிகிச்சை பெற்றுவந்த இவர்  நேற்று வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக்கு வந்த தனது நண்பரை  வழியனுப்பி வைப்பதற்காக அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வரும்போது மண்டூர்,
வெல்லாவெளியூடான வீதியில் எருமை மாடொன்று திடீரெனப் பாய்ந்து வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது. 

இதன்போது வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எருமை மாட்டுடன் மோதியதில் தாங்கள் இருவரும் காயமடைந்ததாக இறந்தவரின் நண்பர் தெரிவித்தார்.

இறந்தவரின் நண்பர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெல்லாவெளி பொலிஸார் இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X