2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்லடியில் கைதான மூன்று பெண்களுக்கும் விளக்கமறியல்

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள விடுதியில் வைத்து செவ்வாய்கிழமை (5) கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கல்லடியிலுள்ள விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் உட்பட மூன்று பெண்களை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (6) ஆஜர்படுத்தப்பட்டபோது இம்மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .