2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய மாநாட்டு தலைவர்களின் மட்டு.விஜயம் இரத்து

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

மட்டக்களப்புக்கு இன்று புதன்கிழமை வருகை தரவிருந்த பொதுநலவாய மாநாட்டு அரச தலைவர்களின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநட்டில் கலந்துகொள்ளும் இருபது நாடுகளின் அரச தலைவர்கள் மட்டக்களப்புக்கு இன்று மாலை வருகை தந்து இரண்டு தினங்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிடயிருந்தனர்.

இந்நிலையில், இவர்களின் வருகை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (12) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புக்கு வருகை தரவிருந்த பொதுநலவாய மாநாட்டு அரச தலைவர்களை வருகையையொட்டி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் சிவில் சமூக அமைப்பு என்பன பாரிய ஏற்பாடுகளை செய்திருந்தன. இந்நிலையில் இவர்களின் இரத்து செய்யப்பட்டமையானது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'ஏற்கனவே மட்டக்களப்புக்கு இளவரசர் சார்ள்ஸ் உட்பட வெளிநாட்டு அரச தலைவர்கள் வருகை தருவதாக இருந்தது. இதற்காக இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுவர் மற்றும் பொதுநலவாய மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து பார்வையிட்டும் சென்றிருந்தனர்.

பின்னர் இளவரசர் சார்ள்ஸ் வருவதில்லை என தெரிவிக்கப்பட்டு பொதுநலவாய மாநட்டில் கலந் கொள்ளும் இருபது நாடுகளின் அரச தலைவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தருவார்கள்' என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .