2025 மே 02, வெள்ளிக்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஏற்பாட்டில்  கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் சர்வதேச சிறுவர்தின மற்றும் முதியோர் வார நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கலந்துகொண்டார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர்  நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேசசபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், தேசிய நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள ஆணையாளர் எம்.யமுனா பெரேரா, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இதன்போது  பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முதியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

விதவைகளுக்கான வாழ்வாதாரப் பொருட்களும் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .