2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிவானந்தம் மலர் வெளியீடு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் 'சிவானந்தம்' எனும் பெயரில் விசேட மலர் வெளியீட்டு விழாவும் சாதனை படைத்த மாணவர் கௌரவிப்பும் நேற்று மாலை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் கே.மனோராஸ் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, சாதனை படைத்த மாணவர்கள் பலர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .