2025 மே 01, வியாழக்கிழமை

மண்முனைப்பற்று மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனைப்பற்று மத்தியஸ்தசபைக்கு 5 பெண்கள் உட்பட 25 பேர் மத்தியஸ்தசபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சபையின் புதிய தலைவராக கே.ஜெயசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம், மண்முனைப்பற்று மத்தியஸ்தசபை தலைவர் கே.ஜெயசுந்தரம் மற்றும் மத்தியஸ்தசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .