2025 மே 01, வியாழக்கிழமை

கரையொதுங்கிய படகு

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்
 
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு கடற்கரையோரத்தில் இன்று (27) மாலை பாரிய படகொன்று கரையொதுங்கியது.
 
கட்டுமரங்களினால் தயாரிக்கப்பட்ட இப்படகில் சமையலுக்கான உணவுப்பொருட்களும் காணப்படுகின்றன.
 
பாரிய மரங்கள், மூங்கில்கள் கொண்டு இப்படகு தயாரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
 
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இப்படகினை கரையிலிருந்த மீனவர்களும் பொதுமக்களும் கரைக்கு இழுத்து வந்தனர்.
 
இப்படகு தொடர்பில் எவ்வித விபரங்களுக்கும் அறியப்படாதநிலையில் தொடர்ந்தும் படகு பாலமீன்மடு கடற்கரை பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .