2025 மே 01, வியாழக்கிழமை

பனிச்சையடிக் கடலில் மூழ்கிய இருவரின் சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 28 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில்  குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன  இளைஞர்கள் மூவரில் இருவரின் சடலங்களை சவுக்கடி கடற்கரையோரத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் 07  பேர் ஒன்றாக மேற்படி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, மூவர் கடல் அலையால் அள்ளுண்டனர். ஏனைய  04 பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மற்றையவரது சடலம் தேடப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .