2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மார்ச் 17 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை – கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினர்.

விபத்தில் சிக்கியவர்களில் ஒருவரான கொம்மாதுறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (சமாதான நீதவான்) படுகாயமடைந்த நிலையில் உடனடியாக செங்கலடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொறுப்பு வைத்தியர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X