2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காஞ்சிரங்குடா பெரிபொயின்ட் வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் முனைக்காட்டு கிராமத்தில் கொங்கிறீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்ட காஞ்சிரங்குடா பெரிபொயின்ட்  வீதியை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் புதன்கிழமை (16) திறந்து வைத்தார்.

'தேசத்திற்கு மகுடம்' வேலைத்தி;ட்டத்தின் கீழ் 8,636,720 ரூபா செலவில் இவ்வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திலுமதி சிவப்பிரியா வில்வரட்னம், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வீதி கொங்கிறீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X