2025 மே 02, வெள்ளிக்கிழமை

விபத்தில் யுவதி படுகாயம்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள சென் செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்னால் இன்று (17) இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு சின்ன உப்போடையைச் சேர்ந்த எஸ். சிறியங்கா  (வயது18) என்பவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் பாதையைக் கடக்க முற்பட்ட போது கல்லடிப் பாலத்தினூடாக நகரை நோக்கி சென்ற லொறி மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் வாயினாலும் மூக்கினாலும் இரத்தம் வெளியேறியுள்ள நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X