2025 மே 01, வியாழக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தின் பட்டாபுரம், அனைகட்டிவெளி, மாலையர்கட்டு ஆகிய கிராமங்களில் இயங்குகின்ற அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைகப்புக் குழுக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ உபகரணங்கள் அக்ரெட் எனும் அரச சார்பற்ற அமைப்பினால் வெள்ளிக்கிமை (29) வழங்கப்பட்டுள்ளதாக அக்ரெட் அமைப்பின் திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன் தெரிவித்தார்.

இதன்போது அக்ரெட் நிறுவனத்தினால் தலா 450000 ரூபா பெறுமதியான பாதுகாப்பு அங்கிகள், லைற், கையக ஒலிபெருக்கி (மெகாபோண்) போன்ற உபகரணங்கள் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு கையளிக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அக்ரெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தாயுல் பலாஹ், திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .