2025 மே 01, வியாழக்கிழமை

புதையல் தோண்ட முயற்சித்த நான்கு பேர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் காடுகளில் புதையல் தோண்ட முயற்சித்த  4 பேர் சனிக்கிழமை இரவு (14) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

10 பேர் கொண்ட ஒரு குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட ஆயத்தமானபோது படையினர் துரிதமாகச் செயற்பட்டு அவர்களைக் கைதுசெய்ய முயற்சித்துள்ளனர்.

அவ்வேளையில் ஆறுபேர் தப்பியோடிவிட்டதாகவும் நான்கு பேரைக் கைதுசெய்த இராணுவத்தினர் அவர்களை கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்றும் இவர் பொலன்னறுவை ஹிங்குறாகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .