2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

ஜே.வி.பி அலுவலகத்துக்கு தீவைக்க முயற்சி

Menaka Mookandi   / 2014 ஜூன் 23 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கு இனந்தெரியாதோர் சிலர் தீ வைத்து சேதப்படுத்த முயற்சித்துள்ளனர் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் நாளை மறுதினம் (25) புதன்கிழமையன்று மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவினால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் இன்று (23) திங்கட்கிழமை அதிகாலை 1.40 மணியவில் அந்த அலுவலகத்திற்கு முன்னால் இனந்தெரியாத சிலர் டயர் ஒன்றை போட்டு தீ வைத்துள்ளனர். 

அலுவலக திறப்பு விழாவுக்கு விளம்பர போஸ்டர்கள் ஒட்டிவிட்டு அலுவலகத்திற்கு வந்த போது டயர் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டேன். பின்னர் அதை அணைத்து விட்டேன். இதனால் எந்தவொரு சேதமும் அலுவலகத்திற்கு ஏற்படவில்லை. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கும் 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொலைபேசியில் கூறினேன்.

பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த அலுவலகத்திற்கு பொலிஸார் இருவரை பாதுகாப்பு கடமையிலும் நியமித்துள்ளனர்.

திட்டமிட்டபடி எதிர்வரும் புதன்கிழமை (25) அன்று அலுவலகம் திறந்து வைக்கப்படுமென றஊப் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X