2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருத்தல யாத்திரை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மண்டூர் முருகன் ஆலயத்தை நோக்கிய திருத்தல யாத்திரை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன் தெரிவித்தார்.

இத்திருத்தல யாத்திரையில் திராய்க்கேணி, அட்டப்பள்ளம், காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பிரதேசங்களை சேர்ந்த 350ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக  காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் செயலாளர் எஸ்.ஜெயராஜ் தெரிவித்தார்.

மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்த உற்சவம் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X