2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை, ஏறாவூர் புகையிரத நிலைய மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்ஹ, இதில் கலந்து கொண்டு பொலிஸாரின் அணிவகுப்பைப் பரிசீலித்தார்.
ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷித்த குமார, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம உடனிருந்தார்.
இதன்போது பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வாகனங்களின் தராதரமும் பரிசோதிக்கப்பட்டது.

பொலிஸ் பரிசோதனை முடிவில் பொலிஸ் சேவைத் தராதரங்கள் பற்றிய விளக்கமும் வினைத்திறனுள்ள நட்புறவுடனான பொலிஸ் சேவை பற்றியும் பொலிஸாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X