2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு நொச்சிமுனை பிரதேசத்தில் கருமாரியம்மன் கோவில் நிர்மானத்துக்;காக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நேற்று (29) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

நொச்சிமுனை பிரதேச கருமாரியம்மன் கோவில் பரிபாலன சபை தலைவர் எஸ்.வசந்தகுமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டும் வைபவத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், மற்றும் பிரதியமைச்சரின் இணைப்பாளர் திருமதி ருத்மலர் ஞானபாஸ்கரன் உட்பட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கோவில் நிர்மானிக்கப்படவுள்ள காணி தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் எடுத்துக் கொண்ட முயற்சியினால் இது தொடர்பான சர்ச்சை தீர்த்து வைக்கப்பட்டு இந்தக்காணி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து கோவிலுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் நிதிப்பங்களிப்புடனும் மக்கள் பங்களிப்புடனும் இந்தக் கோவில் நிர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X