2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வேலைத்தளம் அமைப்பதற்கு நிதியுதவி

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


பாரம்பரிய கைவினைக் கைத்தொழில் கிராமக் கருத்திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில், மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் 138 குடும்பங்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலைத் தளமொன்றை அமைத்துக் கொள்வதற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள செங்களி வடிவமைப்பாளர் நிலையத்தில் சனிக்கிழமை (11) கட்டட நிர்மாணத்துக்குரிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி கே. தங்கேஸ்வரி 138 குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளையும், கை மரங்களையும் வழங்கி வைத்தார்.

வேலைத் தளமொன்றை அமைத்துக் கொள்வதற்காக இந்தக் குடும்பங்களுக்கு ஏற்கெனவே சீமெந்து, மணல், பி.வி.சி. குழாய், இரும்புக் கம்பிகள், கருங்கற்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும், இறுதிக் கட்டமாக இன்றைய தினம்  கூரைத் தகடுகளையும், கை மரங்களையும் வழங்கி வைத்தாக தங்கேஸ்வரி தெரிவித்தார்.

மட்பாண்டக் கைவினைப் பொருட்கள் செய்வோரை ஊக்குவிக்கும் உதவித் திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் நாலாம், ஐந்தாம் குறிச்சிக் கிராமங்கள், ஐயன்கேணி, எல்லை வீதி, கொம்மாதுறை, பன்குடாவெளி ஆகிய கிராமங்களில் மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபடும் 138 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நவீன மற்றும் தரம்வாய்ந்த உற்பத்திப் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர, வேலைத்தள கொட்டில் அமைப்பதற்கான கட்டடப் பொருட்கள் வழங்கப்பட்டதாக தங்கேஸ்வரி மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.வி. பண்டார, தொடர்பாடல் உத்தியோகத்தர் பாலச்சந்திரன் நிஷாந்தன், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரியதர்ஷினி மதன், மட்பாண்டப் பயிற்சிப் போதனாசிரியை எஸ். பரஞ்சோதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் செல்வி கே. தங்கேஸ்வரியின் வேண்டுகோளின் பேரில் பாரம்பரிய சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கில் பாரம்பரியக் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்திற்கு 38 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X