2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம்

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சந்திவெளிக் கிராமத்தில் பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் வகையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர்.எம். றுசைட்டின் தலைமையில் நடமாடும் விழிப்புணர்வு செயற்றிட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

இதில் கிராம உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சந்திவெளி கிராமமட்;ட குழுக்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.

இந்நடமாடும் விழிப்புணர்வின்போது இக்குறித்த பிரதேசத்தில் நீண்ட நாட்களாக பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள 8 மாணவர்களும், பாடசாலை செல்வதில் ஒழுங்கீனமாக இருந்த 32 மாணவர்களும் இனங் காணப்பட்டனர்.

இவர்களுக்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதோடு, அவர்கள் கல்வி கற்று வந்த பாடசாலைகளுக்கு மீள இணைக்கப்பட்டனர். இதில் மேலும் ஒருவரை தொழில் பயிற்சி நிலையத்துக்கு இணைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ்விழிப்புணர்வின்போது பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு, சிறுவர்களுடைய உரிமை, பாதுகாப்பு, மற்றும் அபிவிருத்தி பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகம் ஏற்படும்போது தொடர்பு கொள்ள வேண்டிய முறைமைகள் பற்றியும்,  அம்மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர்.எம். றுசைட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகளைத் தடுத்து, அவர்களுடைய அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X