2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நிதி நிபுணத்துவம் மற்றும் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்வு

Sudharshini   / 2014 நவம்பர் 19 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

– வடிவேல் சக்திவேல்

நிதி நிபுணத்துவம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை (19) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இலங்கை வங்கி கிளையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில், இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு குறுங்கால கடன் திட்ட தலைமை அதிகாரி ஆர்.ஸ்ரீபத்மநாதன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதநிதிகள், இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வங்கியில் வாடிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முறைசாரா நிதி நிறுவனங்கள் தொடர்பாக மக்கள் எவ்வாறு விழிப்புடன் நடந்து கொள்ளுதல், கள்ள நோட்டுக்களை எவ்வாறு அடையாளம் காணுதல் என்பன தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், வங்கியினூடாக மக்கள் பெற்றுக்கொள்ள கூடிய, விவசாயக் கடன், வாழ்வாதாரக் கடன், வறுமை ஒழிப்புக்கடன் உட்பட ஏனைய இதர சேவைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதாக, இலங்கை வங்கி களுவாஞ்சிகுடி கிளையின் வறுமை ஒழிப்பு குறுங்கால கடன் திட்ட வெளிக்கள அதிகாரி என்.வி.வாசன் கூறினார்.

இந்நிகழ்வில், இலங்கை வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் மாட்டீன் சிந்தியா,  முகாமையாளர் கே.ரெட்ணகுமார் உட்பட வங்கி உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X