2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பிலுள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (21) சந்தித்துக் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். கமலதாஸ் தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு, மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் கல்லடி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலிலும் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனப் பிரதிநிதிகள், ஆரையம்பதி முக்கியஸ்தர்கள், சர்வமத முக்கியஸ்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளையும் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளான பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் மாலைதீவுக்கான காரியாலயத்தின் பணிப்பாளர் கிளின்டன் எஸ். ராட் பிறவுன் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி தலைவர் சியோபான் ஓட் ஐட்ஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தற்போதைய நிலைமை, அபிவிருத்தி நடவடிக்கைகள், இன நல்லுறவு பற்றி ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும், இலங்கையின் அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமான உறவு என்றும் நிலைத்திருக்கும். மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கூறியதாக மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் எஸ். கமலதாஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம். சுபைர்,  அதன் நல்லிணக்கக் குழுத் தலைவர் யு.எல்.எம்.என். முபீன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். மாமங்கராசா தலைமையிலான சிவில் சமூக அமைப்பின்  பிரதிநிதிகள் ஆகியோர் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பில் இணைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X