2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீடமைப்புக்கான அடிக்கல் நடும் வைபவம்

Thipaan   / 2014 நவம்பர் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

ஸ்ரீ லங்கா யூத் தொண்டர் அடிப்படையிலான கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால்  வீடமைப்புப் பணிக்கான அடிக்கல் நடும் வைபவம் பிரதேச சம்மேளன தலைவர் கோ.தினேந்திரன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) சந்திவெளியில் இடம்பெற்றது.

மிகவும் வறிய நிலையில் காணப்படும்  குடும்பத்துக்காக வழங்கப்படும் இத்திட்டமானது இவ்வருடம் சந்திவெளியை சேர்ந்த ச.தமேயந்தினி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ் அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜே.கலாராணி, கிரான் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.விந்தியன்  மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் வை.குலேந்திரகுமார், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை நேற்றயதினம், சந்திவெளி பாலையடித்தோணாவிலுள்ள சந்திரசேகரம் சியாமளா என்பவருக்கு ஸ்ரீ லங்கா யூத் தொண்டர் அடிப்படையிலான கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்துகொண்ட அதிதிகளுடன் பாலையடித்தோணா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.ரதன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X