2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சட்டத்துக்கு எல்லோரும் கட்டுப்படுகின்றனர்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 23 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஒரு சமூகத்திலுள்ள எல்லோரும் சட்டத்துக்கு  கட்டுப்படுகின்றனர் என  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார். 

ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தால்  கிராம மட்ட தலைவர்களுக்கான 'பொதுச்சட்டம்' எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு சனிக்கிழமை (22) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாமன்றத்தால் இயற்றப்படுகின்ற நியதிச்சட்டங்களையும் வழக்காறுகளையும் நீதிமன்றங்களால் வழங்கப்படும் முத்தீர்ப்புக்களையும் மூலங்களாகக் கொண்டு சட்டம் உருவாக்கப்படுகின்றது. ஒரு சமூகத்திலுள்ள எல்லோரும் சட்டத்துக்கு கட்டுப்படுகின்றனர். சமூகத்தை ஒழுங்கமைக்கச் சட்டம் அவசியம் என்பதால், சட்டத்துக்கு மேலானவர் எவரும் இல்லை

குற்றம் புரிபவர்களை தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டே 'குற்றவியல் சட்டம்' எழுதப்பட்டுள்ளது. ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின், தடுப்புக்காவலில் இருக்கும்போது, அவரை சந்தேக நபர் என்று கருதப்பட்டு மனிதாபிமான முறையில் நடத்தப்படல் வேண்டும். வழக்கு முறைகளின் பின் குற்றவாளி என தீர்ப்பளி;க்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மாத்திரமே உண்டு.

ஆனால் 'சிவில் சட்டம்' என்றபோது இது குற்றவியல் சட்டங்களுக்குள் அடங்காத வேறு எந்தவொரு சட்டமுறைமைக்குள் அடங்கும் சட்டங்களாகும்;. இது தனி மனிதர்களுக்கிடையேயான பிரச்சினையாகும். தன்னாலேயே தன்னுடைய செலவிலேயே வழக்குத் தொடர வேண்டும். இப்பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் ஆவண ரீதியான ஆதாரங்கள் அவசியம். இதனால், சகல விடயங்களிலும் எழுத்து மூலமான ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இன்று வங்கிக்கடன் பெறுபவருக்கும்; வாகனம் குத்தகைக்கு எடு;ப்பவருக்கும் பிணையாக பலர் நிற்கின்றனர். தெரியாத மொழியிலுள்ள பத்திரத்தில் கையொப்பமிடுகின்றனர். பயன் பெற்றவர்கள் உரிய காலத்தி;ல் கொடு;ப்பனவுகளைக் கட்டாது விடுகி;ன்றபோது, பிணையாளிகள் மாட்டிக் கொள்கி;ன்றனர். மட்டுமன்றி, பொலிஸ் நிலையமென்றும் நீதிமன்றமென்றும் அலைந்து திரிகின்றனர். எனவே கால சூழலுக்கு ஏற்றவாறு சட்டம் மாறுகிறது. மட்டுமன்றி பிரயோகம் தொடர்பில் தண்டணை பற்றி நாம் அறிய வேண்டும். மக்களின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை மக்களே பாதுகாக்க வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X