2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 23 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பஸ் வண்டியில் ஹெரோயின் கடத்திவந்ததாகக் கூறப்படும் குருநாகலைச்  சேர்ந்த ஒருவரை ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 484 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொழும்பு –அக்கரைப்பற்று வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியொன்றை ஏறாவூரில் இடைமறித்து ஏறாவூர் பொலிஸார்; சோதனையிட்டனர்.

இதன்போது, இந்தச் சந்தேக நபரிடம் ஹெரோயின் இருப்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X