2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

படகு கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 26 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அடை மழை பெய்துவருகின்ற நிலையில், ஏற்படக்கூடிய  வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், 40  குதிரைவலுக்கொண்ட இயந்திரத்தையும் படகையும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிடம்  கன்டிகப் இன்ரநஷனல்  நிறுவனம்  புதன்கிழமை (26) கையளித்தது.

இந்தப் படகு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின்;; வேப்பவெட்டுவான் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மாவடியோடை - காரைக்காடு பாலங்களுக்கு இடையில் வெள்ள அனர்த்த காலத்தில்  பாதைத்துண்டிப்பின்போது பயன்படுத்தப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மேலும், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முருங்கன்தீவு, சாராவெளி, பூலாக்காடு, பிரம்படித்தீவு, அம்புஸ்குடா உள்ளிட்ட மக்களின் போக்குவரத்துக்காக 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 குதிரைவலுக்கொண்ட இயந்திரம், படகு, பாதுகாப்பு அங்கிகளையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு செவ்வாய்க்கிழமை (25) கையளித்தது.

இதன் காரணமாக வாழைச்சேனை மக்கள் கிண்ணையடி ஆற்றின் ஊடாக செய்யும் பாதுகாப்பற்ற பயணம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X