2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 27 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு,  ஆரையம்பதியில்  புதன்கிழமை (26) இடம்பெற்ற  விபத்தில் இருவர் காயமடைந்து, ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மழை பெய்து கொண்டிருந்த வேளையில்,  எதிரெதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் சைக்கிள் மோதியே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சின்ன ஊறணியைச் சேர்ந்த எஸ்.கஜேந்திரன் (வயது 45) மற்றும் எம்.சுருளிராஜன் (வயது 37) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X