2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தலைமைத்துவப் பயிற்சி

Sudharshini   / 2014 நவம்பர் 30 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

களக்கூறு - 1 எனும்  தொனிப்பொருளில் நடைபெற்ற ஆசியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின்  5 கல்வி வலையங்களில் 4 வலையங்களிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஜனாதிபதி சாரணியர்கள் உட்பட 42 பேர் பங்கு கொண்டதாக மாவட்ட ஆணையாளர் பி. ஆனந்தராஜா தெரிவித்தார்.

தலைமைத்துவம், ஆளுமை மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை வளர்க்கும் நோக்கோடு சாரண ஆசிரியர் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்றது.

இலங்கை சாரணியர் சங்க தலைமைச் செயலக ஆணையாளர் எஸ். சவுந்தரராஜா பயிற்சியை வழங்கினார்.

மேலும், உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணர் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X