2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'எதிர்காலத்தில் தொழிற்சாலை அமைத்துக் கொடுப்போம்'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

'செயற்றிட்டங்களின் மூலம் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு எதிர்காலத்தில் சிறியளவிலான தொழிற்சாலை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம்' இவ்வாறு  ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஈ.தர்சன் தெரிவித்தார்.

ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் இரண்டு வருட வாழ்வாதார செயற்றிட்ட நிறைவு நிகழ்வு வவுணதீவு, இலுப்படிச்சேனை கிராம சேவகர் பிரிவில் புதன்கிழமை (03) நடைபெற்றது. இந்த நிகழ்வில்  உரையாற்றும போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எமது செயற்றிட்டமானது வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் இலுப்படிச்சேனை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  வாழைக்காலை, சின்னகால போட்டமடு, நாவற்தோட்டம், இலுப்படிச்சேனை ஆகிய கிராமங்களில் 350 இற்கும் மேற்பட்ட குடும்;பங்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி பெண் தலைமைத்துவ  குடும்பங்களுக்கு மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரம், மேட்டுநில பயிர்செய்கைக்கான நிலக்கடலை, சோளன், விதைநெல் வழங்கல் என உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வாழ்வாதார முயற்சியிலான பயிற்சிகள் வழங்கல், சிறுவர் பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகள், சிறுவர் போசாக்கு, தாய், சேய் நலன், சூழல் சார்ந்த விழிப்புணர்வு, சேதனப் பசளை தயாரித்தல், அறுவடைக்கு பின்னான தொழில்நுட்பம் என விவசாயம் சார்ந்த பயிற்சிகள், தலைமைத்துவம், தொழில் அபிவிருத்தி பயிற்சிகள், பெண்கள் சமத்துவம் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பனையோலையிலான கைப்பணிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி என்பன கொடுக்கப்பட்டுள்ளது. திட்டம் செயற்படுத்தும் கிராம மட்டத்தில் 27 பேர் கொண்ட சமூக ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் செயற்றிட்டத்தின் நிறைவின் பின்னர் கிராம மட்டத்தில் அபிவிருத்திற்காகவும் தொழில் ஊக்குவிப்புக்காகவும் செயற்படவுள்ளனர்.

இச்செயற்றிட்டத்தின் மூலமாக இக்கிராமங்களில் உள்ள 1348 பேர்களில் அனைவரும்  குறைந்தது ஒரு விதத்திலேனும் பயனடைந்துள்ளனர்.  எமது இரண்டு வருடகால திட்டம் நிறைவடைந்துள்ள இச்சந்தர்ப்;பத்தில் இனிவரும் காலங்களில் இக்கிராமத்தில் சிறியளவிலான தொழிற்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம்

இலுப்படிச்சேனை பல்தேவை கட்டடத்தில் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் திட்ட இணைப்பாளர் வசந்தகுமார் ரோகிணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் திட்ட இணைப்பாளர் கே.சுதாகரன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அரசகுமார், சமுர்த்தி உத்தியோகத்தர் கே.சிவசம்பு,பொருளாதார உத்தியோகத்தர் எஸ்.இளங்கோ, மற்றும் திட்டம் நடைமுறைப்படுத்திய கிராமங்களின் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X