2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சந்திரிக்காவை பற்றிய எஸ்.பி.யின் கருத்து கவலையளிக்கின்றது: ஹம்சா

Gavitha   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்பில் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க வெளியிட்டுள்ள கருத்து மிகவும் கவலையளிக்கின்றது என்று காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான திருமதி ஸல்மா ஹம்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே என்பார்கள். பெண்களை தரக்குறைவாக பேசுவது பெண்களை அசிங்கமான வார்த்தைகளை கொண்டு பேசுவது ஒரு ஒழுக்கமில்லாத நாகரீகமற்ற நடவடிக்கையாகும்.

அதிலும் குறிப்பாக இலங்கையில் 12 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து நாட்டை வழிநடாத்தி கொடூர யுத்தத்தினால் இந்த நாட்டுக்காக தனது கண்ணையும் இழந்த இலங்கையின் உயர்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா பண்ணடார நாயக்க குமாரதுங்கவுக்கு இவ்வாறு கருத்து வெளியிடுவதானது மேலும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

சந்திரிகா அல்ல வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது.
பெண்களின் மீதான வல்லுறுவு என்பது உடலினால் மேற்கொள்ளப்படும் வல்லுறவு மாத்திரமல்ல. இவ்வாறான வார்த்தை பிரயோகங்களும் வல்லுறவுக்குள் அடங்கும் என்றே நான் கருதுகின்றேன்.

அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மனித நேயம் கொண்ட நாகரீகமுள்ள பண்பாடுள்ள யாரும் சந்திரிக்கா மீதோ அல்லது வேறு எந்த பெண்களின் மீதோ இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொள்ளமாட்டார்கள்.

தனது தாய்க்கு, தனது சகோதரிகளுக்கு அல்லது தனது மனைவிக்கு யாராவது இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களை கூறினால் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந் நிலையில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சந்திரிகாவை பற்றி கூறிய மிக மோசமான அந்த வார்த்தைகளை ஊடகங்கள் மூலமாக பார்த்ததையடுத்து மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் ஒரு பெண் என்ற வகையிலும் பெண்களுக்கான செயற்பாட்டாளர் என்ற வகையில் அவர் கூறிய அந்த வார்த்தைகளையிட்டு கவலை கொள்வதுடன் இதற்காக எனது கண்டனத்தையும தெரிவித்துக் கொள்வதுடன் அந்த வார்த்தையை பிரயோகித்தற்காக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சந்திரிகாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X