2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் பால்நிலை மாநாடு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் பால்நிலை மாநாடு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் வியாழக்கிழமை (18)  நடைபெற்றது.

வை.எம்சீ.ஏ. மற்றும் சேவ்த சில்;ரன் நிறுவனங்கள் இதனை ஏற்பாடு செய்தன.

மட்டக்களப்பு மாவட்ட வை.எம்.சீ.ஏ.செயலாளர் டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 'பால்நிலை சமத்துவத்தை ஊக்குவித்தலும் பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலும்' எனும் தொனிப்பொருளில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ஜெய்சங்கர்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன் உள்ளிட்ட பலர் விரிவுரைகளை நடத்தினர். மாவட்ட திவிநெகும திணைக்கள பணிப்பாளர் எம்.மனோகிதராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட துறை சார்ந்த பெண்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பெண்களின் உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X