2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சந்திவெளியிலுள்ள மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த  எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரியூட்டப்பட்டுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

20 இற்கும்  மேற்பட்டோரைக் கொண்ட  ஆயுதம் தாங்கிய  கும்பல் இந்த அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (25)  அதிகாலை வந்ததாகவும் அவர்கள்  அலுவலகத்துக்கு  பெற்றோல் குண்டு வீசியதுடன் அங்கிருந்தவற்றை அடித்து உடைத்ததாகவும் அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறினர். 

இந்தச் சம்பவத்தின்போது,   அலுவலகத்தில்  இருந்த 11 பேரும் தப்பியோடியதாகவும் அலுவலகத்தில் இருந்தவர்கள் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை   மேற்கொண்டுள்ளனர்.
 


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X