Sudharshini / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
இலங்கை கணக்காளர் சேவையை சேர்ந்த, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையாற்றும் ரி.தேவகாந்தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையாற்றும் ரி.தேவகாந்தன், அவரது வீட்டில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (08) இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மைத்துனரும் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அநாகரிகமான செயலுக்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் தனது வன்மையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்வதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கொதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவாக முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரை கேட்டுக்கொள்கின்றது.
குறித்த இனந்தெரியாத நபர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago