Gavitha / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
விளையாட்டுத் துறையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பதார்த்தங்களின் பயன்பாட்டினைத் தடுத்தல் தொடர்பான செயலமர்வொன்று வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துத் தடுப்பு முகவரமைப்பினால் (SLADA- sri lanka anti doping agency) மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவினருடன் இணைந்து இந்த செயலமர்வு நடைபெற்றது.
இலங்கையின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துத் தடுப்பு முகவரமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சீவலி ஜயவிக்கிரம இச்செயலமர்வில் விளக்கங்களை வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், மாவட்ட விளையாட்டுத்துறை இணைப்பாளர் வை.ஜீ.எம்.பாலித வணிகரத்ன, மாவட்ட விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர் ரிசோமாஸ்கந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாவட்டததிலுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள், இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகளும் இச்செயலமர்வில் பங்கு கொண்டனர்.
இந்த செயலமர்வில், தடைசெய்யப்பட்டு ஊக்க மருந்துகள் தொடர்பான அடிப்படையான விடயங்கள், இவற்றினைப் பாவிப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள், பாவனையில் ஈடுபடுபவர்களைப் பரிசோதித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பாவனைகள் தொடர்பில் நடைபெற்ற முதலாவது செயலமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .