Sudharshini / 2015 மார்ச் 14 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (14) பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதெனவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் பின்னால் வந்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்வித்தில் காயமுற்ற முச்சக்கர வண்டியின் சாரதியான கும்புறுமூலை வெம்பினை சேர்ந்த ஆர்.ரவின்சன் (26) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்டுத்துள்ளதாக தெரிவித்தனர்.

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago