2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இஸ்லாமிய நூதனசாலை திறப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் இஸ்லாமிய நூதனசாலை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மற்றும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மை உட்பட முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்கள் என்பவற்றை பிரதிபளிக்கும் வகையில் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முழுமையான முயற்சியினால் இந்நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

திறப்புவிழாவில், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவருமான சட்டத்திரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், காத்தான்குடி நகர சபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X