Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டின் அபிவிருத்திக்காக சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், 90 கர்ப்பிணிகளுக்கு போஷாக்கு உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு, காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்துக்கு வழங்க வேண்டும். அதற்காக அரசாங்கம் கர்ப்பிணிகளுக்கு போஷாக்கு உணவுகளை வழங்குகின்றது. சிறந்த குழந்தைகளையும் நன்றாக சிந்திக்கக்கூடிய குழந்தைகளையும் நாம் சமூகத்துக்கு நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் கே.ரங்கநாதன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்;, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், உட்டபட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
4 hours ago